top of page

1. வாழ்ந்திடுவோம் வாங்க

அரண்மனைக்கு வாங்க
 அரசரையேப் பாருங்க
 அடுத்த ராஜா யாருன்னு
 அவரு சொல்லு வாருங்க 

 எழிலனுக்கு ஆசை
 சம்பாரிச்சான் காசை
 புத்தாடை வாங்கி
 புறப்பட்டான் ஏங்கி
 
 பிச்சைக்காரர் குளிருக்கு
 தன்னாடை கொடுத்தான்.
 வெகுண்ட மாட்டை அடக்கி
 நல்ல பெயர் எடுத்தான்.
 
 அரசர்  பிச்சைக்கார
 வேடம் போட்ட தறிந்தான்
 கருணை வீரம் நிறைந்து
 மனதில் இடம் பிடித்தான்.
 
 மானம் காத்த பருத்தியை
 சிறந்த பூ என்றான்.
 காட்சி காணும் ஒளியை
 சிறந்த ஒளி என்றான்.
 
 பகுத்து பார்க்கும் அறிவினை
 சிறந்த ஆயுதம் என்றான்.
 பார் போற்றும் மன்னனாய்
 தேர்வு பெற்று நின்றான்.
 
 எழிலனைப் போல்
 பரிவாய்
 எழிலனைப் போல்
 துணிவாய்
 எழிலனைப் போல்
 அறிவாய்
 வாழ்ந்திடுவோம் 
 வாங்க.
 
 *******
கருத்து: அறிவு, துணிவு, பரிவு, கடுமையான உழைப்பு, தலைமைத்துவம்
எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம் 
1 view0 comments

Recent Posts

See All

5. பாண்டியன் கற்றுக் கொண்ட வெற்றிப் பாடம்

பாண்டியன் என்ற சிறுவன் ஒருவன் வேண்டியதெல்லாம் வெற்றி - மனம் தோண்டியேப் பார்த்தால் சத்தம் கேட்கும் எங்கும் வெற்றி வெற்றி சீண்டிய தோல்வியை சீரழித் திடவே சிரித்தான் கவலை வற்றி - தடைத் தாண்டியே போக தி

4. அரசர் ஓவியம்

குமரேசன் ஓவியரு குடிசையில வாழ்ந்தாரு அரும்பு என்ற மனைவியோடு வறுமையில வாழ்ந்தாரு அந்த நாட்டு அரசனுக்கு வந்ததொரு அரிய ஆசை அச்சு அசலா வரையச் சொல்லி முறுக்குனாரு பெரிய மீசை அரண்மனையில் குமரேசன்

3. மூங்கில் கூடும் மேலோகமும்

நல்லூர்ல ஞானி ஒருத்தர் இருந்தாரு - அவர் நல்ல செய்தி கொடுப்பதனால் சிறந்தாரு அன்பழகர் என்ற சீடர் சேர்ந்தாரு - ஒரு விஷப் பாம்பை அறையில் அவர் வளர்த்தாரு. மூங்கில் கூடு செஞ்சி பாம்பை விட்டாரு. - அதில

bottom of page