John B. Parisutham

Jan 2, 20211 min

3. மூங்கில் கூடும் மேலோகமும்

நல்லூர்ல ஞானி ஒருத்தர் இருந்தாரு - அவர்
 
நல்ல செய்தி கொடுப்பதனால் சிறந்தாரு
 
அன்பழகர் என்ற சீடர் சேர்ந்தாரு - ஒரு
 
விஷப் பாம்பை அறையில் அவர் வளர்த்தாரு.
 

 
மூங்கில் கூடு செஞ்சி பாம்பை விட்டாரு. - அதில்
 
பால் பழங்கள் தினமும் அதற்கு இட்டாரு.
 
மற்ற சீடர் பயந்து பயந்து செத்தாரு. - அவர்
 
ஞானியிடம் சென்று பத்த வச்சாரு.
 

 
பாம்பை உடன் காட்டில் விடச் சொன்னாரு - மறுத்து
 
வீம்புடனே அன்பழகர் நின்னாரு.
 
மேலோகம் போகவழி என்றாரு - ஆனால்
 
அன்பழகர் தன்வழியே சென்றாரு.
 

 
ஞானியோட தூதுவராய் ஆனாரு - அதனால்
 
பத்து நாளு வெளியூரு போனாரு
 
பாம்புக்கு பாலு வாங்கி வந்தாரு - அறைக்கு
 
ஓடிச் சென்று பழத்தோட தந்தாரு.
 

 
பசியோட கோபமான்னு எழுந்தாரு - பாம்பு
 
படக்குன்னு கொத்த கீழ விழுந்தாரு.
 
பெரியங்க பேச்சையே விட்டாரு - அதனால்
 
அவருடைய உசிரையே விட்டாரு.
 

 
********
 
படிப்பினை: பெரியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளை ஆழ்ந்து யோசித்து கடைப்பிடித்தல் நலம்.
 
எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

    30
    0